ரியர் அட்மிரல் சனத் உத்பல கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சனத் உத்பல இன்று (2021 ஜூன் 14) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் 15 வது கேடட் ஆட்சேர்ப்பின் கேடட் அதிகாரியாக கடற்படையில் சேர்ந்த ரியர் அட்மிரல் சனத் உத்பல, தனது பதவிக் காலத்தில் பல்வேறு கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார். இயக்குநர் கடற்படை விளையாட்டு, வட மேற்கு, மேற்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளின் துணைத் தளபதி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முப்படையின் ஒருங்கிணைப்பு அதிகாரி, தன்னார்வ கடற்படையின் தளபதி ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார்.