நிகழ்வு-செய்தி

கடல்சார் நிறுவனத்தின் இலங்கைக் கிளை தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட கடல்சார் நிறுவனத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் இலங்கைக் கிளை 2022 இல் தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. ஐக்கிய இராச்சிய கப்பல் கூட்டுத்தாபனத்தின் இலங்கைக் கிளை இலங்கை கடற்படை மற்றும் வணிகக் கப்பல் நிறுவனங்களின் உறுப்பினர்களைக் கொண்ட இலங்கையின் ஒரே கடல்சார் அமைப்பாகும்.

15 Jun 2022

கடற்படைத் தளபதி கௌரவ பிரதமரை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை இன்று (2022 ஜூன் 15,) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

15 Jun 2022

கடற்படையின் சேவா வனிதா பிரிவு பொசன் போயா தினத்தை முன்னிட்டு சமய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

மிஹிந்து தேரர் இலங்கைக்கு வந்ததை நினைவு கூறும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 2022 ஜூன் 14 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன அவர்களின் தலைமையில் சில் வைபவம் நிகழ்வு இடம்பெற்றதுடன் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

15 Jun 2022