நிகழ்வு-செய்தி

திருகோணமலை போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு பாதுகாப்பு செயலாளர் அஞ்சலி செலுத்தினார்

திருகோணமலை கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவுத் தூபிக்கு முன்பாக போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று காலை (2022 ஜூலை 23) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்னவின் தலைமையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றதுடன் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் போர்வீரர் நினைவுத்தூபிக்கு மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.

23 Jul 2022

வெற்றிகரமாக பயிற்சியை பூர்த்தி செய்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றும் திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் பயிற்சி பெற்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது (தொழில்நுட்ப) மற்றும் 36வது ஆட்சேர்ப்பின் சேர்ந்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறும் நிகழ்வு 2022 ஜூலை 22 ஆம் திகதி திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

23 Jul 2022