நிகழ்வு-செய்தி

P 627 என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இலங்கை நோக்கிச் செல்லும் வழியில் சிங்கப்பூரின் சாங்கி (Changi) துறைமுகத்தை வந்தடைந்தது

2022 செப்டம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கிய P627 ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல், 2022 அக்டோபர் 22 ஆம் திகதி காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இந்த நிகழ்வில் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி சசிகலா பிரேமவர்தனவும் கலந்து கொண்டார்.

23 Oct 2022

248 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 238 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 248 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 238 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 அக்டோபர் 22 ஆம் திகதி திருகோணமலை, சாம்பூர் இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

23 Oct 2022

‘Trinco Dialogue - 2022’ கடல்சார் மாநாடு வெற்றிகரமாக திருகோணமலையில் நடைபெற்றது

‘Trinco Dialogue - 2022’ கடல்சார் மாநாடு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்ணாகொட கேட்போர் கூடத்தில் 2022 ஒக்டோபர் 21 ஆம் திகதி கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

23 Oct 2022