நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் படையணியுடன் இணைந்த P 627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்தில் இருந்து 2022 செப்டம்பர் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு தனது பயணத்தை தொடங்கிய அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட P627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சுமார் 10656 கடல் மைல்கள் (சுமார் 19734 கி.மீ) நீண்ட பயணத்திற்குப் பிறகு இன்று (2022 நவம்பர் 02) காலை கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில் குறித்த கப்பலை வரவேற்கும் நிகழ்வுக்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கௌரவ ஜூலி சங், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன உட்பட கௌரவ அதிதிகள் கலந்து கொண்டனர்.

02 Nov 2022