கடற்படை தாதி கல்லூரியில் தாதி பாடநெறியை முடித்த 41 பேர் தாதி உறுதிமொழியை வழங்கினர்

சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 41 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் தொப்பி அணிவிப்பு மற்றும் தாதியர் உறுதிமொழி வழங்கும் விழா இன்று (2023 மே 15) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தின் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார கல்லூரியின் பீடாதிபதி திரு. எஸ்.எஸ்.பீ வர்ணகுலசூரிய அவர்கள் கலந்து கொண்டார்.

15 May 2023