சட்டவிரோத கடத்தலின் மற்றொரு முயற்சியை கடற்படையினரால் தடுக்கப்பட்டது
கடற்படையால் தயாரிக்கப்பட்ட 350 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன

கடற்படை சமூக சேவை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் உற்பத்தி திட்டத்தால் தயாரிக்கப்பட்ட 350 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்களை இன்று (2021 ஏப்ரல் 21) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
21 Apr 2021
நாட்டின் குறைந்த வசதிகள் கொண்ட 08 பாடசாலைகள் இலங்கை கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது

இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளை 2021 ஆம் ஆண்டில் அபிவிருத்தி செய்து நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உகந்த சூழலையாக உருவாக்கும் கடற்படை சமூக சேவை திட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு, தென்கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய கடற்படை கட்டளைகளில் 2021 ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கப்பட்டது. இந்த சமூக சேவை திட்டத்திற்கான நிதி பங்களிப்பு அனைத்து கடற்படை அதிகாரிகளும் மாலுமிகளும் தங்கள் மாத சம்பளத்தை தானாக முன்வந்து வழங்குகிறார்கள், மேலும் இந்த கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மனிதவளத்தையும் கடற்படை வழங்குகிறது.
20 Apr 2021
ரூ .26 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது
திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் இலங்கை கடற்படைக்கு ஆசீர்வாதமலித்து கிறிஸ்துவ மத நிகழ்ச்சியொன்று நடைபெற்றது

இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துவ மத நிகழ்ச்சி 2021 ஏப்ரல் 17 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் திருகோணமலை பிஷப் கலாநிதி கிறிஸ்டியன் நொயெல் இமானுவேல் உள்ளிட்ட பாதிரியார்களின் பங்கேப்புடன் கடற்படை கப்பல்துறையில் உள்ள Christ the King Chapel தேவாலயத்தில் நடைபெற்றது.
18 Apr 2021
கடற்படை தளபதியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற பீடி இலைகள் கடற்படையினரால் கைது
கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்ட லங்காகம நில்வெல்ல பாலம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

தெற்கு மாகாணத்தில் காலி, நெலுவ, லங்காகம மற்றும் நில்வெல்ல கிராமங்களை இணைக்கும் கடற்படையின் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட லங்காகம நில்வெல்ல பாலம் தெற்கு மாகாண ஆளுநர் கலாநிதி சிலி கமகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னயின் பங்கேற்புடன் 2021 ஏப்ரல் 10 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
11 Apr 2021
நில்வெல்ல நீருக்கடியில் கலைக்கூடம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நில்வெல்ல கடற்கரை இலங்கையின் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு அழகான கடற்கரையாகும், குறித்த அழகான கடற்கரையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்ட நில்வெல்ல நீருக்கடியில் கலைக்கூடம் (Underwater Gallery Nilwella) இன்று (2021 ஏப்ரல் 10) கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு நாமல் ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
10 Apr 2021
வணிக வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை தொடர்கிறது

வணிக வெடிபொருட்களைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில், கடற்படை கடந்த வாரத்தில் கிழக்கு கடற்படை கட்டளையில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளின் போது, மீன்பிடி நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட பல வணிக வெடிபொருட்களுடன் 02 சந்தேக நபர்களை கடற்படை கைப்பற்றியது.
09 Apr 2021
சட்டவிரோதமான முறையில் இந்த நாட்டிலிருந்து குடியேற முயன்ற 20 நபர்கள் கடற்படையினரால் கைது
72 கடற்படை வீரர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையில் பணி யாற்றும் 43 மூத்த கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 மற்றும் 29 இளைய கடற்படை வீரர்களுக்கு ரூபா 200,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2021 ஏப்ரல் 07) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
07 Apr 2021
கிழக்கு கடற்படை கட்டளையின் உதவியுடன் திருகோணமலை திஸ்ஸ கல்லூரியில் நீர் விளையாட்டு போட்டித்தொடறொன்று நடைபெற்றது

நீர் விளையாட்டுக்கான ஆர்வத்தையும் திறனையும் வளர்க்கும் நோக்கில் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் அமைந்துள்ள திஸ்ஸ கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நீர் விளையாட்டு போட்டித்தொடறொன்று 2021 ஏப்ரல் 05, அன்று திருகோணமலை துறைமுகத்தில் உள்ள பெப்பர்போட் (Pepperpot) இறங்குதுறைக்கு முன்னால் கடலில் கிழக்கு கடற்படை கட்டளையால் நடத்தப்பட்டது. கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வைய்.என்.ஜெயரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் 4-வது துரித தாக்குதல் படகு படை மற்றும் கடல் அறிவியல் பீடத்தின் கடற்படை தொழில்நுட்ப பாடசாலை இனைந்து இந்த போட்டித்தொடரை ஏற்பாடு செய்தது.
07 Apr 2021
நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தில் நிர்மானிக்கப்பட்ட பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரர் நினைவு ஓய்வு இல்லம் கடற்படை தளபதியால் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் பங்களிப்புடன் நயினாதீவு பண்டைய ராஜமஹா விஹாராயத்தில் கட்டப்பட்ட பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரர் நினைவு மூன்று மாடி ஓய்வு இல்லத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2021.ஏப்ரல் 03) திறந்து வைத்தார். இந் நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கழந்துகொண்டார்.
03 Apr 2021
இன்டர் கிளப் மகளிர் முதல் பிரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் சாம்பியன்களாக கடற்படை வெற்றி பெற்றது

இலங்கை கிரிக்கெட் நிருவனம் 2021 ஏப்ரல் 02 அன்று வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்டர் கிளப் மகளிர் முதல் பிரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டு 'விக்கெட் வித்தியாசத்தில் இராணுவ' ஏ 'அணியை தோற்கடித்தது.
03 Apr 2021
ஹன்வெல்ல, நிரிபொல ரோமன் கத்தோலிக்க முதன்மை கல்லூரியின் புதுப்பிக்கும் நடவடிக்கைகளுக்காக கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக, கடற்படை பங்களிப்புடன் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் மிரான் சல்காதுவின் நிதி உதவியுடன், ஹன்வெல்ல, நிரிபொல ரோமன் கத்தோலிக்க முதன்மை கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மைதானமொன்று மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிற இடங்கள் மார்ச் 29 அன்று திறந்துவைக்கப்பட்டது.
01 Apr 2021
ஹரித டிவி தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கும் விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

கொழும்பு, ஹுனுப்பிட்டிய – கங்காராம விகாரையில் இயங்கும் ஶ்ரீ ஜினரத்ன கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி அலைவரிசையின் தொடக்க ஒளிபரப்பு இன்று (2021 மார்ச் 31) அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
31 Mar 2021
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகள் கடற்படை கைப்பற்றியது

கிழக்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய கடற்படைக் கட்டளைகளின் கடற்படையினர் கடந்த 02 வாரங்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகளுடன் சுழியோடி உபகரனங்கள் மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
31 Mar 2021
திக்கோவிட்ட துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்தப்பட்டது
சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவத்தில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல் பொருட்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம் இன்று (2021 மார்ச் 28) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களின் தலைமையில் அனுராதபுரம் புனித நகரத்தில் தூபி அமையப்பெற்றுள்ள வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கலந்து கொண்டனர்.
28 Mar 2021
241 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 377 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு
OCEANLUST மின்சார இதழ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டின் முதல் பவளப்பாறை சுத்தம் செய்தல் திட்டம் கடற்படைத் தளபதியின் தலைமையில்

OCEANLUST மின்சார இதழ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டின் முதல் பவளப்பாறை சுத்தம் செய்தல் திட்டத்தின் தொடக்க விழா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் இன்று (2021 மார்ச் 27) உஸ்வெடகெய்யாவ Malima Club House மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் போது களனி ஆற்றின் முகப்பில் இருந்து வடக்கு நோக்கி விரிந்திருக்கும் பவளப்பாறைகளை மற்றும் கடற்கரையை சுத்தம் செய்யப்பட்டது.
27 Mar 2021