விளையாட்டு செய்திகள்

தாய்லாந்து சர்வதேச ஜூடோ போட்டித்தொடரில் கடற்படை ஜூடோ வீராங்கனை கே.வி.எஸ்.டி. குமாரசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

2024 செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் 2024 (Thailand International Judo Championship 2024) போட்டித்தொடரில் இலங்கை ஜூடோ அணியை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை ஜூடோ வீராங்கனை கே.வி.எஸ்.டி.குமாரசிங்க 70 கிலோ எடைப் பிரிவின் கீழ் போட்டியிட்டு தனது தாய்நாட்டிற்காக வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

16 Oct 2024

கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித்தொடர் வெலிசரையில் நிறைவடைந்தது

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித்தொடர் 2024 ஒக்டோபர் 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வெலிசரை இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவன ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்றதுடன், இங்கு ஆண்களுக்கான இணைச் சம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படைக் கட்டளை மற்றும் பயிற்சிக் கட்டளை வென்றதுடன் பெண்கள் இணைச் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை மற்றும் தெற்கு கடற்படை கட்டளை வென்றது.

13 Oct 2024

இன்டர் கிளப் முதல்தர மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் (சமிக்ஞை) என்.ஏ.எச்.டி சில்வா சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்டர் கிளப் முதல் தர (TIRE B) மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் போட்டித்தொடர் 2024 செப்டெம்பர் 24 ஆம் திகதி முதல் 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை 12 கழகங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது, இதில் இலங்கை கடற்படை அணி பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் (சமிக்ஞை) என்.ஏ.எச்.டி சில்வா போட்டித்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

13 Oct 2024

‘Layton Cup Boxing Tournament – 2024’ யில் கடற்படை பல பதக்கங்களை வென்றது

2024 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரி உள்ளக குத்துச்சண்டை அரங்கிலும் நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரையிலும் நடைபெற்ற ‘Layton Cup Boxing Tournament - 2024’ பொட்டித்தொடரில் கடற்படை குத்துச்சண்டை வீரர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும் (01), ஐந்து வெள்ளிப் பதக்கங்களையும் (05) 10) வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

07 Oct 2024

இண்டர் கிளப் முதல்தர மூன்று நாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் பட்டத்தை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் ஜி.எல்.ஏ.எல் மதுசங்க வென்றுள்ளார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இண்டர் கிளப் முதல்தர (TIRE B) மூன்று நாள் கிரிக்கெட் போட்டித்தொடர் 28 ஜூன் 2024 முதல் 15 செப்டம்பர் 2024 வரை 12 விளையாட்டுக் கழகங்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது, இதில் இலங்கை கடற்படை அணியின் கடற்படை வீர்ர் ஜி.எல்.ஏ.எல் மதுசங்க போட்டித்தொடரில் சிறந்த பந்து வீச்சாளராக தெரிவு செய்யப்பட்டார்.

03 Oct 2024

கட்டளைகளுக்கு இடையேயான சைக்கிள் ஓட்டுதல் போட்டித்தொடர் - 2024 இலங்கை கடற்படை கப்பல் தம்பபண்ணி நிருவனத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது

கட்டளைகளுக்கு இடையேயான சைக்கிள் ஓட்டுதல் போட்டித்தொடர் - 2024 இலங்கை கடற்படை கப்பல் தம்பபண்ணி நிருவனத்தில் 2024 செப்டம்பர் 28 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன் அதன் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படை கட்டளை வென்றது மற்றும் வட மத்திய கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது.

30 Sep 2024

13வது பாதுகாப்பு சேவைகள் கயிறு இழுத்தல் போட்டித் தொடரில் கடற்படை இரண்டாம் இடத்தை வென்றது

13வது பாதுகாப்பு சேவைகள் கயிறு இழுத்தல் போட்டித் தொடர் 2024 செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிருவனத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுடன், அங்கு இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படையின் ஆண்கள் கயிறு இழுத்தல் அணி பெற்றது.

29 Sep 2024

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 8 வது கேனோ ஸ்பிரிண்ட் போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது

தேசிய படகோட்டம் மற்றும் கயாக்கிங் சங்கத்தினால் (National Association of Canoe and Kayaking in Sri Lanka - NACKSL) ஏற்பாடு செய்யப்பட்ட 8வது கேனோ ஸ்பிரிண்ட் தேசிய போட்டித்தொடர், முதன்முறையாக 2024 செப்டம்பர் 14 முதல் 16 வரை யாழ்ப்பாணக் கோட்டை கடற்பரப்பில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், போட்டியின் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை இராணுவமும் இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படையும் வென்றது.

18 Sep 2024

பதின்மூன்றாவது பாதுகாப்பு சேவை விளையாட்டுப் போட்டித்தொடர் பனாகொடவில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது

பதின்மூன்றாவது பாதுகாப்பு சேவை விளையாட்டுப் போட்டித்தொடர் 2024 செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி பனாகொட இராணுவ முகாம் வளாகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்து கொண்டார்.

13 Sep 2024

Barts Bash -2024 படகோட்டம் போட்டித்தொடரில் கடற்படைக்கு பல வெற்றிகள்

‘Barts Bash -2024’ படகோட்டம் போட்டித்தொடர், 2024 செப்டம்பர் 08 ஆம் திகதி போல்கொட நீர்த்தேக்கத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், அங்கு கடற்படை படகோட்டம் அணியின் விளையாட்டு வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்றனர்.

09 Sep 2024