நடவடிக்கை செய்தி
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 41 பேர் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 01 முதல் 15 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் நாற்பத்தொரு (41) நபர்களுடன் பதினொரு (11) சிறுபடகுகள் மற்றும் இரண்டு (02) இழுவைப் படகுகள் ஆகியவற்றை கடற்படையினர் கைது செய்தனர்.
18 Apr 2026
161 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயினை ஏற்றிச் சென்ற, உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையின் சிறப்பு நடவடிக்கை ஒன்றில் கைது செய்யப்பட்டது
'முழு நாடும் ஒன்றாக' தேசிய நடவடிக்கையில் ஒரு முக்கிய பங்காளியாக, இலங்கை கடற்படை, பிற சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து, போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை உள்ளடக்கிய சிறப்பு கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் கீழ், இலங்கையின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஒரு கடற்படை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பைகளை ஏற்றிச் சென்ற ஒரு உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் (01) நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
17 Apr 2026
மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சிக் கையிருப்புடன் 3 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை, 2026 ஏப்ரல் 14 அன்று மன்னார் வங்காலை கடற்கரையில் நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு (01) டிங்கி மற்றும் மூன்று (03) சந்தேக நபர்களிடமிருந்து இருபத்தாறு (26) கிலோகிராமுக்கும் அதிகமான ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டது.
16 Apr 2026
மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பகுதியில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு கடற்படையால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், மன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் 2026 ஏப்ரல் 13 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) நான்கு (04) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.
15 Apr 2026
உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக, வட கடற்பரப்பில் இந்திய மீன்பிடி படகை கடற்படையினர் கைப்பற்றினர்
2026 ஏப்ரல் 11 ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணத்தின் காரைநகர் கோவிளம் பகுதிக்கு அருகிலுள்ள இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு (01) இந்திய மீன்பிடிக் படகையும் பன்னிரண்டு (12) இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.
12 Apr 2026
யாழ்ப்பாணம், நாகர்கோவில் கடற்கரையில் இரவில் மூழ்கி சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளை பிடித்ததற்காக 6 சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்தது
யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி காலையில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடல் அட்டைகளை கரைக்கு கொண்டு வந்த சுமார் ஆறு (06) நபர்களையும், தொள்ளாயிரத்து முப்பத்தொன்பது (939) கடல் அட்டைகள், இரண்டு (02) படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடட்படையினர் கைப்பற்றினர்.
12 Apr 2026
சட்டவிரோதமாக சந்தேகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளை கல்பிட்டியவில் வைத்து கடற்படையினரால் கைது
கல்பிட்டிய, பங்களவத்தை மற்றும் சேதவாதீ கடலோரப் பகுதிகளை உள்ளடக்கி 2026 ஏப்ரல் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில், இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏறத்தாழ 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், சந்தேகத்திற்கிடமான பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
10 Apr 2026
உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிக் படக்கொன்றுடன் 10 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், மன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பத்து (10) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.
10 Apr 2026
மன்னார், இலுப்பைக்கடவை கடற்பகுதியில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த 36 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், மன்னாரின் இலுப்பைக்கடவை கடல் பகுதியில் 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்தாறு (36) நபர்களையும், ஆயிரத்து எழுநூற்று ஐம்பது (1750) கடல் அட்டைகளுடன், ஆறு (06) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
02 Apr 2026
சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஏலக்காய் கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
2026 மார்ச் 31 அன்று கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற தொண்ணூற்றெட்டு (98) கிலோகிராம் ஏலக்காயை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
02 Apr 2026


