நடவடிக்கை செய்தி

மன்னாரில் ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

மன்னார் பள்ளியமுனை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் 2025 டிசம்பர் 10 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ஆறு (06) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 Dec 2025

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கையின் கிழக்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆபத்தான மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையின் உதவி

2025 டிசம்பர் 10 ஆம் திகதி இரவு, திருகோணமலையிலிருந்து 16 கடல் மைல் (சுமார் 29 கி.மீ) தொலைவில் கிழக்குக் கடலில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த ஒரு மீனவரை அவசரமாக தரையிறக்கி, சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.

12 Dec 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்கள் புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 டிசம்பர் 09 ஆம் திகதி கல்பிட்டி புத்தளம் விஜயகடுபொத, அஞ்சல் 61 வீதித் தடுப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவற்றை கொண்டு செல்ல முயன்ற சுமார் ஐந்நூற்று நாற்பத்தி இரண்டு (542) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், ஒரு (01) கெப் வண்டியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

11 Dec 2025

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ரூ.14 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் நெடுந்தீவின் வெள்ளை கடற்கரைப் பகுதியில் 2025 டிசம்பர் 07 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 62 கிலோகிராம் மற்றும் 200 கிராம் வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

08 Dec 2025

கல்பிட்டி கடற்கரையில் கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் மேலும் ஒரு போதைப்பொருளினை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், கல்பிட்டியின் இப்பந்திவு கடலோரப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, மூன்று (03) பைகளில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிங்கி படகானது 2025 டிசம்பர் 05 ஆம் திகதி இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட டிங்கி படகிற்கு உதவுவதற்காக வந்த மற்றுமொரு டிங்கி படகில் இருந்த நான்கு (04) சந்தேக நபர்களுடன், இன்று (2025 டிசம்பர் 06) காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் நடத்தப்பட்ட நிபுணர் பரிசோதனையின் மூலம், அந்தப் பைகளில் 63 கிலோகிராமை விட அதிகமான ஐஸ் மற்றும் 14 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், இந்த நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

06 Dec 2025

நெடுந்தீவு கடலில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற 16,000,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை கைப்பற்றியது

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

05 Dec 2025

மன்னார் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை

மன்னார், நானாட்டான், முருங்கன், விதயானகுளம் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் 2025 நவம்பர் 29 முதல் டிசம்பர் 01 வரை கூட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

02 Dec 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் மருத்துவ சேவைகள், உலர் உணவு, குடிநீர் வழங்குதல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த நீர் விநியோக சேவைகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படை நேற்று (2025 டிசம்பர் 01,) உதவி வழங்கியது.

02 Dec 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவிசாவளை பிரதேச மக்களுக்கு மனிதாபிமான நிவாரணங்களை வழங்க கடற்படை உதவியது

சீரற்ற காலநிலை நிலவியதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவிசாவளை பிரதேச மக்களுக்காக, அமிதிரிகலை சுகாதார மருத்துவ அலுவலகம் மூலம் ஒரு மருத்துவ சிகிச்சையானது, அவிசாவளை குருகல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் 2025 நவம்பர் 30 ஆம் திகதி நடைபெற்றதுடன், இந்த மருத்துவ சிகிச்சைக்காகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்குவதற்காகவும் கடற்படை உதவி வழங்கியது

01 Dec 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நூற்று ஐம்பத்தேழு (157) பேரை கடற்படை அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் மீட்ட பின்னர், அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்க கடற்படையால் 2025 நவம்பர் 30 அன்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

01 Dec 2025