நடவடிக்கை செய்தி

மீன்பிடி படகிலிருந்து 2 மீனவர்களை கடற்படையினர் மீட்டனர்

திருகோணமலைப் பகுதியில் நிலவும் சீரரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, திருகோணமலை உள் துறைமுகப் பகுதியில் பாதிக்கப்பட்ட மீன்பிடிக் கப்பலில் இருந்த இரண்டு (02) மீனவர்கள், 2025 டிசம்பர் 15 நடத்தப்பட்ட சிறப்பு மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

19 Dec 2025

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் ரூ.31 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் 2025 டிசம்பர் 17 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்காக தயாராக இருந்த சுமார் நூற்று நாற்பது (140) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒரு கெப் வண்டி (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

18 Dec 2025

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 26 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, 2025 டிசம்பர் 06 முதல் 15 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இருபத்தைந்து (25) நபர்களையும் பதின்மூன்று (13) டிங்கி படகுகளையும் கைப்பற்றியதுடன். மேலும், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முப்பத்தாறு (36) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒரு (01) சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

18 Dec 2025

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் நெடுந்தீவின் வெள்ளியாய் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை 2025 டிசம்பர் 14 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இருபத்தி ஆறு (26) கிலோ மற்றும் தொள்ளாயிரம் (900) கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர்.

14 Dec 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 1740 கிலோகிராம் பீடி இலைகளை சிலாபத்தில் கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 டிசம்பர் 10 ஆம் திகதி சிலாபம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து எழுநூற்று நாற்பது (1740) கிலோகிராம் பீடி இலைகளைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

13 Dec 2025

மன்னாரில் ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

மன்னார் பள்ளியமுனை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் 2025 டிசம்பர் 10 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ஆறு (06) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 Dec 2025

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கையின் கிழக்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆபத்தான மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையின் உதவி

2025 டிசம்பர் 10 ஆம் திகதி இரவு, திருகோணமலையிலிருந்து 16 கடல் மைல் (சுமார் 29 கி.மீ) தொலைவில் கிழக்குக் கடலில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த ஒரு மீனவரை அவசரமாக தரையிறக்கி, சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.

12 Dec 2025

மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1292 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றப்பட்டனர்

மன்னாரின் எருக்கலம்பிட்டி கடலோரப் பகுதியில் 2025 டிசம்பர் 14 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்து இருநூற்று தொண்ணூற்று இரண்டு (1292) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு கெப் வண்டியை கடற்படையினர் கைப்பற்றினர்.

11 Dec 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்கள் புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 டிசம்பர் 09 ஆம் திகதி கல்பிட்டி புத்தளம் விஜயகடுபொத, அஞ்சல் 61 வீதித் தடுப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவற்றை கொண்டு செல்ல முயன்ற சுமார் ஐந்நூற்று நாற்பத்தி இரண்டு (542) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், ஒரு (01) கெப் வண்டியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

11 Dec 2025

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ரூ.14 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் நெடுந்தீவின் வெள்ளை கடற்கரைப் பகுதியில் 2025 டிசம்பர் 07 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 62 கிலோகிராம் மற்றும் 200 கிராம் வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

08 Dec 2025