நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகள் கல்பிட்டியில் பறிமுதல் செய்யப்பட்டன
இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜனவரி 14 ஆம் திகதி கல்பிட்டி குடாவ பகுதியில் ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் அறுநூற்று பதினேழு (617) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற (01) கெப் வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
17 Jan 2026
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 237 பறவைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் வட கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
யாழ்ப்பாணம், கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இன்று (2026 ஜனவரி 14) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற இருநூற்று முப்பத்தேழு (237) பறவைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகையும், மூன்று (03) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
15 Jan 2026
திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன
திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் 2026 ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து (05) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.
15 Jan 2026
நீர்கொழும்பு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 621 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
2026 ஜனவரி 12 ஆம் திகதி நீர்கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
14 Jan 2026
கல்பிட்டி கந்தகுளி கடலில் 108,480 மருந்து மாத்திரைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்
கல்பிட்டி கந்தகுளி கடல் பகுதியில் 2026 ஜனவரி 12 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரத்து நானூற்று எண்பது (108,480) மருந்து மாத்திரைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
13 Jan 2026
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 01 இந்திய மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2026 ஜனவரி 12 ஆம் திகதி இரவு ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இதன் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பத்து (10) இந்திய மீனவர்களையும், ஒரு (01) இந்திய மீன்பிடிக் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
13 Jan 2026
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 13 நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை 2026 ஜனவரி 06 முதல் 11 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளின் மூலம், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், உரிமங்கள் இல்லாமல் சுழியோடுதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) டிங்கி படகுகளுடன் பதின்மூன்று (13) நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
13 Jan 2026
யாழ்ப்பாணம், மரதன்கேணியில் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் மரதன்கேணி பகுதியில் 2026 ஜனவரி 09 ஆம் திகதி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபரை ஒருவரை (01) கடற்படையினர் கைது செய்ததனர்.
11 Jan 2026
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 1560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படை, மற்றும் காவல்துறையினர் இணைந்து 2026 ஜனவரி 08 ஆம் திகதி கொழும்பு அளுத்கடை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து ஐநூற்று அறுபது (1560) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
09 Jan 2026
நுவரெலியாவின் கிரிகரி ஏரியில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு விமானிகள் மற்றும் உயிர்காப்பாளர்களின் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
நுவரெலியாவில் உள்ள கிரிகரி ஏரியில் இன்று (2026 ஜனவரி 07,) தரையிறங்கும் போது ஒரு தனியார் கடல் விமானம் விபத்துக்குள்ளானதுடன், கிரிகரி ஏரியில் கடமையில் இருந்த கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காக்கும் குழு உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது, அதில் இருந்த இரண்டு (02) விமானிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
08 Jan 2026


