நடவடிக்கை செய்தி

2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் 28158 மில்லியன் ரூபாவிற்கு மேல் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைமருந்துகள் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இந் நாட்டின் சட்ட அமுலாக்க முகவர் மற்றும் பிராந்திய கடல்சார் பங்குதாரர்களுடன் இணைந்து கடந்த (2024) ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருள் மற்றும் போதைமருந்து கடத்தல், சட்டவிரோத பொருட்கள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 407 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்களுடன், ரூ.28,158 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் மற்றும் போதைமருந்துகள் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த பெரிய அளவிலான பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றபட்டது.

06 Jan 2025

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு செல்லப்பட்ட 11 கிலோ 300 கிராம் தங்கம் கற்பிட்டி, பத்தலன்கடுவயில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2025 ஜனவரி 04) கற்பிட்டி பத்தலன்கடுவ தீவிற்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில், கடற்படையினரால் அதிகாலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்கு முயற்சித்த (11) கிலோ (300) கிராம் தங்கம், ஒரு (01) டிங்கி படகுடன் 03 சந்தேகநபர்கள் கடற்டையினரால் கைது செய்யப்பட்டனர்.

04 Jan 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் வைத்து கைது

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து இன்று (2024 டிசம்பர் 08) யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் எட்டு (08) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

08 Dec 2024

சுமார் 18 மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான கேரள கஞ்சா வடகடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் 2024 டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 45 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடை) கைது செய்யப்பட்டது.

06 Dec 2024

நாமல் ஓய மற்றும் பொரபொல நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள், அவசர கதவுகள் மற்றும் வடிகால்களை சரிசெய்வதற்கு கடற்படை சுழியோடி பிரிவின் உதவி

அம்பாறை, இகினியாகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நாமல் ஓய நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் அவசர கதவுகளை சரிசெய்வதற்கும், மஹாஓய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பொரபொல நீர்த்தேக்கத்தின் வடிகால்களை சரிசெய்வதற்கும் 2024 டிசம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் கடற்படையின் சுழியோடி உதவிகள் வழங்கப்பட்டது.

05 Dec 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 டிசம்பர் 04 ஆம் திகதி மன்னாருக்கு வடக்கில் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினான்கு (14) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 Dec 2024

யாழ்ப்பாணம் குருநகரில் வைத்து 75 மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (04 டிசம்பர் 2024) காலை யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்து எட்டு (188) கிலோ முந்நூற்று ஐம்பது (350) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்று கைப்பற்றியுள்ளனர்.

04 Dec 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 டிசம்பர் 02 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலக்கேணிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பதினெட்டு (18) இந்திய மீனவர்கள் இந்திய - இலங்கை சர்வதேச கடற்பரப்பை கடந்து இலங்கையை நோக்கி சுமார் 30 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

03 Dec 2024

இலங்கை கடற்படையின் உதவியுடன் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3380 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பல நாள் மீன்பிடி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றத்தின் விளைவாக, இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பெருமளவு ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine), இலங்கை மீன்பிடி படகு (01)மற்றும் சந்தேக நபர்கள் இன்று (02 டிசம்பர் 2024) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கஜபாகு கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் குறித்த போதைப்பொருள் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் எம்.ஆனந்த் அவர்களும் கலந்துகொண்டார்.

02 Dec 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 733 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி, மொஹொத்துவாரம கடற்கரைப் பகுதியில் 2024 டிசம்பர் 01 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எழுநூற்று முப்பத்து மூன்று (733) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

02 Dec 2024