நிகழ்வு-செய்தி

கொரிய குடியரசுக் கடற் படைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

கொரிய குடியரசுக் கடற் படைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று (2025 ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

22 Apr 2025

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் கௌரவ மேஜர் ஜெனரல் Faheem-Ul-Aziz (ஓய்வு) 2025 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக அவ் கட்டளையின் பிரதித் கட்டளைத் தளபதியைச் சந்தித்தார்.

22 Apr 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் வட மத்திய கடற்படை கட்டளை வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியது

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் வட மத்திய கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு விழாவானது 2025 ஏப்ரல் 20 ஆம் திகதி தலைமன்னார், பியர்கம ரோமன் கத்தோலிக்க கல்லூரி மைதானத்தில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.

22 Apr 2025

கடற்படை தளபதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட கடற்படைத் தளபதி, அவ் நிறுவனத்தில் பயிற்சிப் பெறும் பயிற்சி மாலுமிகள், பயிற்சி ஆலோசனைப் பணிக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட,கனிஷ்ட மாலுமிகளுக்கு உரையாற்றினார். அப்போது, கடற்படைத் தளபதி, பயிற்சி பெறும் மாலுமிகள் மற்றும் பயிற்சி ஆலோசகர்களின் பொறுப்பை வலியுறுத்தியதுடன், பயிற்சி நடவடிக்கைகளை வினைத்திறனாகவும் திறம்படவும் மேற்கொள்வதற்கு தேவையான அறிவுறுத்தல்களை கடற்படை தளபதி வழங்கினார்.

22 Apr 2025

தென்கிழக்கு கடற்படை கட்டளை பக்மஹா விழாவினை மிக விமர்சையாக நடாத்தினர்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தென்கிழக்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழாவானது 2025 ஏப்ரல் 15 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக , 2025 ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் தீகாயு ஆகிய நிறுவனங்களில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி தலைமையில் நடைபெற்றது.

21 Apr 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் தெற்கு கடற்படை கட்டளை வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியது

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் தெற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சூர்ய மங்கல்ய' என்ற விழாவானது 2025 ஏப்ரல் 18 ஆம் தேதி இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.

20 Apr 2025

வடக்கு கடற்படை கட்டளையினர் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நடாத்தினர்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வடக்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழாவானது 2025 ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் பிரதி தளபதி தலைமையில் நடைபெற்றது.

20 Apr 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் கிழக்கு கடற்படை கட்டளை சிறப்பு புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தியது

கிழக்கு கடற்படை கட்டளையால் பாரம்பரிய புத்தாண்டு சடங்குகள் மற்றும் கலாச்சார கூறுகளுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழா, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் 'சூர்ய மங்கல்ய' என்ற பெயரில் , திருகோணமலை கடற்படை கப்பல் தளத்தில் 2025 ஏப்ரல் 17 ஆம் திகதி நடைபெற்றது.

20 Apr 2025

வடமேற்கு கடற்படை கட்டளையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்மஹா விழாவானது கொண்டாடப்பட்டது

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வடமேற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழாவானது 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பரண நிறுவனத்தில் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி தலைமையில் நடைபெற்றது.

20 Apr 2025

“சயுரத சூரிய மாங்கல்யம் - 2025” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா சிதுரல கப்பலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

இலங்கை கடற்படையினர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வணிக சேவை மற்றும் ஹரித தொலைக்காட்சி ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட “சயுரத சூரிய மாங்கல்யம் - 2025” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா 2025 ஏப்ரல் 14 ஆம் திகதி அன்று இலங்கை கடற்படை கப்பலான சிந்துரலவில் பாரம்பரிய ஹெல பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார கூறுகளுடன் நடைபெற்றது.

15 Apr 2025