நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 15 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் நோயாளர்களுக்கு விநியோகிப்பதற்காக கண்டி உயர்தர பெண்கள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன

இலங்கைக் கடற்படையில் சமூக நலத் திட்டத்தின் கீழ், கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 15 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் 2024 மார்ச் மாதம் முதல் வாரத்தில் கண்டி உயர்தர பெண்கள் பாடசாலையின் ‘Interact Club’ சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

11 Mar 2024

IORA தினம் கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

IORA தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 'எதிர்கால தலைமுறைகளுக்கான நிலையான இந்தியப் பெருங்கடல்' (Sustainable Indian Ocean for Future Generations) என்ற தொனிப்பொருளின் கீழ், காலி முகத்துவாரத்தில் கடல் தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட கண்காட்சியொன்று இன்று (2024 மார்ச் 10) ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.

10 Mar 2024

இலங்கை தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிலந்த ஹேவாவிதாரண பதவியேற்பு

இலங்கை தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நிலந்த ஹேவாவிதாரண இன்று (2024 பிப்ரவரி 20) இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதியாக தொண்டர் கடற்படை தலைமையகத்தில் பதவியேற்றார்.

20 Feb 2024

இலங்கை கடற்படை கப்பல் சமுதுர முத்தரப்பு கடலோர காவல் கடற்படை பயிற்சி ‘EX – DOSTI – XVI’ இல் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டது

‘EX – DOSTI – XVI’ முத்தரப்பு கடற்படைப் பயிற்சி 2024 பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மாலத்தீவு கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளதுடன், இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர இதில் பங்கேற்பதற்காக இன்று (20 பெப்ரவரி 2024) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.

20 Feb 2024

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான (Indo- Pacific) பிரான்ஸ் தூதுவர் கௌரவ திரு. Marc ABENSOUR அவர்கள் இன்று (2024 பிப்ரவரி 19) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

19 Feb 2024

ஈரானிய கடற்படைக்கு சொந்தமான IRINS ‘Bushehr’ மற்றும் ‘Tonb’ ஆகிய கப்பல்கள் தனது உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு தீவில் இருந்து புறப்பட்டுள்ளது

2024 பெப்ரவரி 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த ஈரானிய கடற்படையின் IRINS ‘Bushehr’ மற்றும் ‘Tonb’ ஆகிய கப்பல்கள் தனது உத்தியோகபூர்வ விஜயங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 பிப்ரவரி 19) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. புறப்படும் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி பிரியாவிடை வழங்கினர்.

19 Feb 2024

இந்தியப் பெருங்கடல் பிராந்திய தகவல் பகிர்வு நிலையான செயல்பாட்டு நடைமுறை பாடநெறி வெற்றிகரமாக முடிவடைந்தது

2024 பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி வரை 05 நாட்களாக கொழும்பு மெண்டரின் ஹோட்டலில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் பிராந்திய தகவல் பகிர்வுக்கான தெற்காசிய பாடநெறி (Indian Ocean Regional Information Sharing -IORIS) நிலையான செயல்பாட்டு நடைமுறை பற்றிய (Standard operation procedure- SOP) தெற்காசிய பாடநெறி வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் அதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் தலைமையில் இடம்பெற்றது.

10 Feb 2024

மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் (Chief of Defence Force of Maldives National Defence Force (MNDF) Lieutenant General Abdul Raheem Abdul Latheef) இன்று (08 பெப்ரவரி 2024) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

08 Feb 2024

இந்தியாவில் செனகல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவில் உள்ள செனகல் தூதரகத்தின் இராணுவ, கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Abdoulaye TRAORE இன்று (2024 பிப்ரவரி 07) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

07 Feb 2024

மதவாச்சி பிரதேச பாடசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்படையின் ஆதரவு

இலங்கை கடற்படையின் சமூக சேவையாக, அநுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி பிரதேசத்தில் அ/புல்எலிய வித்தியாலயம், அ/துலாவெல்லிய வித்தியாலயம் மற்றும் ரம்பேவ கினிகடுவெவ வித்தியாலயம் ஆகியவற்றில் கடற்படை திறன்கள், உழைப்பு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பரோபகாரரின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார வசதிகள் 2024 பிப்ரவரி 05 ஆம் திகதி குறித்தப் பாடசாலைகளில் திறந்து வைக்கப்பட்டது.

07 Feb 2024