நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்க கடற்படை பொது பொறியியல் பணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்
ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக கடற்படையின் பொது பொறியியல் இயக்குனராக இன்று (2025 ஜனவரி 23) கடற்படை தலைமையகத்தின் பொது பொறியியல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
23 Jan 2025
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Amanda Johnston கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை இன்று (2025 ஜனவரி 22) சந்தித்தார்.
22 Jan 2025
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் எம்.ஆனந்த் (M Anand), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை இன்று (2025 ஜனவரி 22) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
22 Jan 2025
கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட 2025 ஜனவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன், இலங்கை கடற்படைக் கப்பல்களான பண்டுகாபய மற்றும் ஷிக்க்ஷாவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை மீளாய்வு செய்தார். தம்மன்னா மற்றும் கஜபா ஆகிய கடற்படையின் பணியை மேற்பார்வையிட்டு, கடற்படையின் பணிகள் குறித்து அந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
13 Jan 2025
கடற்படை தளபதி ஜெயஸ்ரீ மஹா போ சமிது மற்றும் ருவன்வெளி மகா சே ரதுன் வழிபட்டபார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்கள் இலங்கை கடற்படையின் 26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், 2025 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி அனுராதபுரம் அட்டமஸ்தானம் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குச் சென்று கடற்படையின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் இதற்கான கடற்படைச் சேவைகளுக்கு ஆசிகளைப் பெற்றுக் கொண்டதுடன், இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி அனுஷா பானகொட அவர்களும் பங்குபற்றினார்
12 Jan 2025
நங்கூரம் கடற்படை நலன்புரி மையத்தில் போர்வீரர்களுக்காக நீர் சிகிச்சை தடாகம் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டது
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பெளத்த சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி தலைமையிலான குழு ஒன்று 2025 ஜனவரி 09 ஆம் திகதி வெலிசர “Anchorage” கடற்படை நலன் மையத்துக்கு விஜயம் செய்தது. அவர்கள், போரில் பாதிக்கபட்ட மற்றும் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் கடற்படை வீரர்களின் நலனுக்காக நீர் சிகிச்சைக்கு ஏற்றதொரு தடாகம் கட்டுவதற்கான நிதி உதவியை வழங்கினர்
10 Jan 2025
திருகோணமலை கடற்படை கப்பல்துறயை பார்வையிட மற்றும் சுற்றுலாவிற்காக visitdockyard.navy.lk என்ற இணையத்தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது
திருகோணமலை கடற்படை கப்பல்துறைக்கு விஜயம் செய்வதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வசதிக்காக கடற்படையால் உருவாக்கப்பட்ட visitdockyard.navy.lk என்ற புதிய இணையத்தளத்தின் உத்தியோகபூர்வ அறிமுகம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி பிரதி கடற்படைத் தளபதி மற்றும் கிழக்கு கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில், பிரதான நுழைவாயிலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
09 Jan 2025
அரச இலங்கை கடற்படையில் கடமையாற்றி மறைந்த அருளானந்தம் மரியம்பிள்ளை அவர்களின் பூதவுடல் யாழ்ப்பாணம் கைட்ஸ் தீவில் பூரண கடற்படை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
அரச இலங்கை கடற்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட மாலுமியான அருளானந்தம் மரியம்பிள்ளை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி காலமானார், மேலும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி யாழ்ப்பாணம் கைட்ஸ் தீவில் கடற்படையின் மரியாதையுடன் அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
03 Jan 2025
கடற்படை தளபதி பிரதி பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்கள் இன்று (2025 ஜனவரி 02) பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில், கௌரவ பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களைச் சந்தித்தார்.
02 Jan 2025
இலங்கை கடற்படை "க்ளீன் ஶ்ரீ லங்கா" குடிமக்கள் உறுதிமொழி வழங்கி 2025 ஆண்டின் கடமைகளை ஆரம்பித்தது
இன்று காலை (2025 ஜனவரி 01), கடற்படைத் தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை நிறுவனங்களிலும் கப்பல்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடிதை தொடர்ந்து, இலங்கை கடற்படை "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய நிகழ்ச்சியில் குடிமக்கள் உறுதிமொழியை நேரலையில் வழங்கினர். அதன் பின்னர் புதிய ஆண்டில், வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
01 Jan 2025