நடவடிக்கை செய்தி

செய்தி வெளியீடு


2020 செப்டம்பர் 04 அன்று 1100 மணிக்கு “பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இணைந்து எம்டி நியூ டயமண்ட் (MT New Diamond) என்ற எண்ணெய் கப்பலில் தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்திய கடலோர காவல்படையின் (ICGS Sarang) ஐ.சி.ஜி.எஸ் சாரங் கப்பல் பேரழிவு நிவாரண நடவடிக்கைக்கு உதவ சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்முறை தீயணைப்பு வீரர்கள் பொருத்தப்பட்ட டி.டி.டி 01 (TTT One) டக் படகொன்றும் மற்றொரு டக் படகொன்றும் இந்திய கடலோர காவல்படை கப்பலொன்றும் இன்று மாலை பேரழிவு நிவாரண நடவடிக்கைகளுக்காக சம்பவ இடத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

04 Sep 2020

செய்தி வெளியீடு


2020 செப்டம்பர் 04 அன்று 0600 மணிக்கு “பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இணைந்து 2020 செப்டம்பர் 03 ஆம் திகதி காலை 8.00 மணியளவில் எம்டி நியூ டயமண்ட் (MT New Diamond) என்ற எண்ணெய் கப்பலில் தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

04 Sep 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைது

கடற்படை கடந்த வாரத்தில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி ஒன்பது (29) நபர்களையும் அவர்களது மீன்பிடிபொருட்களும் கைது செய்தது.

04 Sep 2020

செய்தி வெளியீடு


2020 செப்டம்பர் 03 அன்று 1800 மணிக்கு “பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்த எம்.டி நியூ டயமண்ட் (MT New Diamond) என்ற எண்ணெய் கப்பலின் பிரதான இயந்திர அறையில் 2020 செப்டம்பர் 03 ஆம் திகதி காலை 8:00 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவல் அணைக்க இப்போது இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகிறது.

04 Sep 2020