சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 5711 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2020 நவம்பர் 06 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்த முயன்ற 5711 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் 06 சந்தேக நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

அதன்படி, நவம்பர் 06 ஆம் திகதி குதிரமலை துடுவ பகுதியில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (IMBL) இந்திய படகொன்று (Dhow) மூலம் சட்டவிரோதமாக உள்ளூர் டிங்கி படகொன்றுக்கு 78 பைகளில் 3218 கிலோகிராம் எடையுள்ள உலர்ந்த மஞ்சள் ஏற்றும்போது, குறித்த செயலில் ஈடுபட்ட இரண்டு (02) இலங்கையர்களும் நான்கு (04) இந்தியர்களும் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், நவம்பர் 06 ஆம் திகதி கல்பிட்டி, மொஹோத்துவரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, கடத்தல்காரர்களால் கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்டு, அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 சாக்குகளில் நிரப்பப்பட்ட 1256 கிலொ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையால் கைப்பற்ற முடிந்தது. இது தவிர, துடுவ கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 48 பைகளில் பொதி செய்யப்பட்ட 1237 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளை கடற்படை பறிமுதல் செய்தது.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் கல்பிட்டி பகுதியில் வசிக்கும் 26 மற்றும் 28 வயதுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் படகில் இருந்த 695 கிலொ கிராம் உலர்ந்த மஞ்சளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துர பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள மஞ்சள் கடற்படையின் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய படகு இந்திய கடல் பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.