சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2217 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை 2021 மார்ச் 04 ஆம் திகதி மற்றும் இன்று (2021 மார்ச் 05) அதிகாலை சிலாவத்துர, மனல்குளம்,நொரொச்சோலை மற்றும் பூலாச்செனை பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2217 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2021 மார்ச் 04 ஆம் திகதி சிலாவத்துர மணல்குளம் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, ஒரு தோட்டத்தில் கட்டப்பட்ட சந்தேகத்திற்கிடமான சிறிய கட்டிடமொன்று சோதனை செய்தனர்.அங்கு 24 பைகளில் அடைக்கப்பட்டுள்ள 826 கிலோகிராம் உலர் மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், இன்று (2021 மார்ச் 05) காலை நொரொச்சோலை பூலாச்செனை பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 38 பைகளில் அடைக்கப்பட்டுள்ள 1391 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், மஞ்சள் கொண்டு செல்ல பயன்படுத்திய கார், ஒரு சிறிய லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டர். கடற்படையால் கைப்பற்றப்பட்ட இந்த மஞ்சள் கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 முதல் 52 வயதுக்குட்பட்ட சிலாவத்துர, பாலவிய மற்றும் வத்தலை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2021 மார்ச் 04 ஆம் திகதி கடற்படையால் கைப்பற்றப்பட்ட உலர் மஞ்சள் மற்றும் சந்தேக நபர்கள் சிலாவதுர பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதுடன் இன்று (2021 மார்ச் 05) காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட உலர் மஞ்சள், மோட்டார் வண்டி, ஒரு சிறிய லாரி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தேகநபர்கள் நொரொச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.