நடவடிக்கை செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மேலும் மூன்று கடற்படை நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டன

நிலவும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு நிவாரணம் வழங்குவதற்காக இன்று (2021 மே 14) மாலை கம்பஹ மற்றும் காலி மாவட்டங்களுக்கு மேலும் மூன்று கடற்படை நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

14 May 2021

சட்டவிரோதமான முறையில் இந்த நாட்டிலிருந்து குடியேற முயன்ற 30 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து 2021 மே 13 மற்றும் 14 திகதிகளில் சிலாபம், சமிதுகம பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 30 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

14 May 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கடற்படை நிவாரண குழுக்களால் மீட்பு

நிலவும் பாதகமான வானிலை காரணமாக, பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. இதேவேளை, தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அவசர நிலைமைகளுக்கு உதவும் வகையில் 10 கடற்படை நிவாரணக் குழுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்படி, 2021 மே 13 ஆம் திகதி இரவு காலி உடுகம பகுதியில் உள்ள கிங் கங்கை நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 06 பேரை கடற்படை நிவாரண குழுக்கள் மீட்டுள்ளது.

14 May 2021