நடவடிக்கை செய்தி

கேரள கஞ்சா கொண்ட ஒருவர் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படை 2021 மே 20 ஆம் திகதி மன்னார் பகுதியில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டதுடன், அப்பொது விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்ட சுமார் 01 கிலோ மற்றும் 450 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் (01) கைது செய்யப்பட்டார்.

21 May 2021

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிட்ட கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் 2021 மே 20 அன்று பகல் தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் சிந்துரல என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் மற்றும் துரித தாக்குதல் படகொன்று குறித்த பகுதிக்கு அனுப்பியது. தற்போது, இந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான ஒரு இழுபறி படகும் (01) இணைக்கப்பட்டுள்ளது.

21 May 2021