கேரள கஞ்சா கொண்ட ஒருவர் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படை 2021 மே 21 ஆம் திகதி திருகோணமலை பகுதியில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டதுடன், அப்பொது சுமார் 01 கிலோ மற்றும் 790 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சர்தாபுர பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து மே 21ஆம் திகதி திருகோணமலை, எலஸ்கார்டன் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் உள்ள ஒரு சுழியோடி மையத்தில் மறைத்து வைத்திருந்த சுமார் 01 கிலோ மற்றும் 790 கிராம் கேரள கஞ்சாவுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 52 வயதான திருகோணமலை, புலியன்குளம் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார். குறித்த சந்தேக நபர் மற்றும் கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்பவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.