நடவடிக்கை செய்தி

“கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி” என்ற தலைப்பின் கீழ் 2021 மே 22 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீடுயுடன் தொடர்பானது

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ இப்போது கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள கப்பலின் பின் பகுதிக்கு பரவுகிறது. வானிலையின் மாற்றத்தால் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக தீ அதிகரித்துள்ளதுடன் இப்போது கப்பலின் குழுவினர் மற்றும் மீட்பு நிறுவனத்தின் நிபுணர்கள் தீ பிடித்த கப்பலில் இருந்து பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

25 May 2021