நடவடிக்கை செய்தி

MV X-PRESS PEARL கப்பலில் ஏற்பட்ட தீ காரணத்தினால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதியை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது குறைந்து வருகிறது. இன்று காலை (2021 மே 27) கப்பலில் இருந்து கடும் புகை மற்றும் சிறிய தீப்பிழம்புகள் காணப்பட்டதுடன் அந்தக் கப்பலில் இருந்து கடலில் விழும் கொள்கலன்கள் உட்பட பல்வேறு குப்பைகள் கடற்கரைக்கு மிதந்து வருவதால் கடற்கரையில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும் அந்த பொருட்களின் நச்சு இரசாயனங்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கவும் கடற்படை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் (MEPA) ஒருங்கிணைந்து சிறப்பு நடவடிக்கையொன்று தொடங்கியுள்ளது.

27 May 2021

சீரற்ற வானிலை காரணத்தால் செயலிழந்த படகு பாலம் கடற்படையினரால் புதுப்பிக்கப்பட்டது

சீரற்ற வானிலை காரணத்தால் ஒரு பகுதி கடலில் மூழ்கி செயலற்ற நிலையில் இருந்த யாழ்ப்பாணம், புங்குடுதீவில் குரிகட்டுவான் படகுத்துறையில் இருந்து நயனதீவுக்கு பொருட்கள் மற்றும் பயணிகளை கொண்டு செல்ல சாலை மேம்பாட்டு ஆணையத்தால் பயன்படுத்தப்பட்ட படகு பாலம் (Ferry) இன்று (2021 மே 27) கடற்படையினரால் புதுப்பிக்கப்பட்டது.

27 May 2021