நடவடிக்கை செய்தி

கடும் மழை காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மழை நீரில் கலந்த உலை எண்ணெயைக் குறைக்க கடற்படையால் நடவடிக்கை

பலத்த மழை காரணமாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள உலை எண்ணெயின்(Furnace oil) எரிபொருள் சேமிப்பு தொட்டிகளில் (Separator Tanks) இருந்து வெளியேறும் மழை நீர் வெளிப்புற சூழலில் நிரம்பி வழிகிறது. அதன் படி வெளிப்புற சூழலுக்கு வெளிப்படும் உலை எண்ணெயைத் அகற்ற மற்றும் தடுக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படை இன்று (2021 ஜூன் 4,) மாலை சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

04 Jun 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் உடனடி நிவாரணம்

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கி 13 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது.

04 Jun 2021

345 கடல் மைல் தூரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

இலங்கையின் தென்கிழக்கில் உள்ள பெரிய ராவண கலங்கரை விளக்கத்திலிருந்து (Great Basses) சுமார் 345 கடல் மைல் (சுமார் 638 கி.மீ) தூரத்தில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வர இலங்கை கடற்படை கப்பல் 'சயுர' அனுப்பட்டதுடன் இன்று (ஜூன் 4, 2021) காலை 1130 மணியளவில் கப்பலால் நோயாளியை மீட்டெடுத்து முதலுதவி தொடங்கப்பட்டது.

04 Jun 2021

பாதிக்கப்பட்ட MV X-PRESS PEARL கப்பலின் விசாரண நடவடிக்கைகளுக்காக கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் உதவி

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட போது தீ விபத்துக்குள்ளான MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலை குறித்து விசாரணை நடத்தி வரும் அரசு அதிகாரிகளின் குழுவை இன்று (2021 ஜூன் 04) கப்பல் அமைந்துள்ள பகுதிக்கு இலங்கை கடலோர காவல்படையின் 'சமுத்ரக்ஷா' கப்பல் முலம் அழைத்து செல்லப்பட்டது.

04 Jun 2021