‘345 கடல் மைல் தூரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி’என்ற தலைப்பின் கீழ் 2021 ஜூன் 04 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீடுயுடன் தொடர்பானது

இலங்கையின் தென்கிழக்கில் உள்ள பெரிய இராவண கலங்கரை விளக்கத்திலிருந்து (Great Basses) சுமார் 345 கடல் மைல் (சுமார் 638 கி.மீ) தூரத்தில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப கடற்படை இன்று (ஜூன் 05, 2021) நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆழ்கடலில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த ‘தூ பாஷி' (பதிவு எண் IMUL-A-0928 MTR) என்ற மீன்பிடி படகில் ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வர இலங்கை கடற்படை கப்பல் 'சயுர' அனுப்பட்டதுடன் நேற்று (ஜூன் 4, 2021) காலை 1130 மணியளவில் கப்பலால் நோயாளியை மீட்டெடுத்து முதலுதவி வழங்கி கரைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.

அதன்படி, ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை ஏற்றி வந்த இலங்கை கடற்படை கப்பல் 'சயுர' இன்று (ஜூன் 05, 2021) மதியம் பிரதான நிலப்பகுதிக்கு வந்த்துடன்,தெவுந்தர கடற்கரையிலிருந்து ஒரு வேகப் படகுக்கு மீனவரை மாற்றப்பட்டு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின் கடற்படை அவரை கராபிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.