சுமார் 400 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இன்று (2022 பிப்ரவரி 23) ஹெந்தல, தொடுபலவத்தை களனி முகத்துவாரத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 400 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவரை கைது செய்துள்ளனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க, கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து களனி முகத்துவாரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று மாலை (2022 பிப்ரவரி 23,) விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது களனி முகத்துவாரப் பகுதியில் ஒரு நாள் மீன்பிடி படகில் 10 சாக்கு மூட்டைகளில், 185 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த சுமார் 400 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேரள கஞ்சா மற்றும் ஒரு நாள் மீன்பிடி படகு ஆகியவற்றை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், கடத்தல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் (01) மற்றுமொரு டிங்கி படகும் கைது செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் வீதி மதிப்பு 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய ஹெந்தல பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர், ஒரு நாள் மீன்பிடி படகு, டிங்கி படகு மற்றும் கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்க உள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட ஏனைய சந்தேக நபர்களை தேடி கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.