நடவடிக்கை செய்தி

75 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (31 மார்ச் 2022) நீர்கொழும்பு, துவ களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 249 கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். மெலும், இந்த நடவடிக்கையின் மூலம் சிறிய கார் ஒன்று மற்றும் மோசடியில் ஈடுபட்ட 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

31 Mar 2022

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை வடகடலில் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடக்கே உள்ள கடற்பகுதியில் இன்று (2022 மார்ச் 31) இலங்கை கடலோர காவல்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 66 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகத்திற்குரிய மூன்று பேர் (03) மற்றும் ஒரு டிங்கி (01) படகு கைது செய்தனர்.

31 Mar 2022

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் ஒரு இந்திய மின்பிடி படகு கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடமேற்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பல இந்திய மின்பிடி படகுகள் விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் 2022 மார்ச் 30 ஆம் திகதி இரவு விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும், இந்த நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களுடன் இந்திய மின்பிடி படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

31 Mar 2022