நடவடிக்கை செய்தி

நயாறு கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் உட்பட பல வெடிபொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

நாயாறு கடற்பகுதியில் 2022 ஏப்ரல் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மிதவையின் மூலம் கடற்பரப்பில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 வாட்டர் ஜெல் குச்சிகள் உட்பட பல வெடிபொருட்களை கடற்படையினர் மீட்டனர்.

27 Apr 2022

மீன்பிடிக்க தயார்படுத்தப்பட்ட வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது

2022 ஏப்ரல் 23 ஆம் திகதி திருகோணமலை சல்லிமுனை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வாட்டர் ஜெல் (Water Gel) வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி தயார்படுத்தப்பட்ட 08 வெடிபொருட்களின் பாகங்கள், 07 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 2.5 அங்குல நீளமுள்ள 07 பாதுகாப்பு உருகிகள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 Apr 2022

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு கேரள கஞ்சா பொதியை மன்னாரில் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஏப்ரல் 20) காலை மன்னார் மணல் கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 81 கிலோ 220 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

20 Apr 2022

மன்னாரில் மற்றுமொரு கேரள கஞ்சா பொதி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஏப்ரல் 18) மன்னார், ஊருமலை கடற்கரையில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 50 கிலோ 380 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

18 Apr 2022

மன்னார் தெற்கு கடற்பரப்பில் 59 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஏப்ரல் 16 ஆம் திகதி மன்னாருக்கு தெற்கு கடற்கரையில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 197 கிலோ 60 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

17 Apr 2022

6200 மில்லியன் ரூபா பெறுமதியான 325 கிலோகிராம் போதைப்பொருள் தென் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து 2022 ஏப்ரல் 12ஆம் திகதி மாலை காலி, தொடந்துவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட அதிரடி நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டுக்குள் கடத்த முயச்சித்த ஹெரோயின் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 300 கிலோ எடையுள்ள போதைப்பொருள் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படுகின்ற போதைப்பொருள் 25 கிலோவை கொண்ட உள்நாட்டு பல நாள் மீன்பிடி படகொன்றும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு டிங்கி படகும், ஒரு கெப் மற்றும் முச்சக்கர வண்டிகளுடன் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டர்.

13 Apr 2022

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் ஒரு இந்திய மின்பிடி படகு கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு வடகிழக்கு பகுதியூடாக அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பல இந்திய மின்பிடி படகுகள் விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் 2022 ஏப்ரல் 03 ஆம் திகதி காலை விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும், இந்த நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களுடன் இந்திய மின்பிடி படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

03 Apr 2022

சட்டவிரோத போதைப்பொருட்கள் கொண்ட ஒருவர் மன்னாரில் கைது

மன்னார், பேசாலை பகுதியில் 2022 ஏப்ரல் 2 ஆம் திகதி இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 563 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) சந்தேகநபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

03 Apr 2022