சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 64 பேர் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேர் இன்று (2022 ஜூன் 15) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட 4வது துரித தாக்குதல் படைப்பிரிவின் P484 படகின் கடற்படையினர் இன்று (2022 ஜூன் 15,) திருகோணமலை கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்றை அவதானித்து சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையில் இருந்து வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் மோசடியில் ஈடுபட்ட ஏலு பேர் (07) ,50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 03 குழந்தைகள் உட்பட 02 முதல் 55 வயதுக்குட்பட்ட 64 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் படி, கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தை வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

ஆட்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான ஆள் கடத்தலில் சிக்கி சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்து சட்டத்தின் முன் சிக்குவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கோருகிறது. மேலும், பழமையான மற்றும் நீண்ட கடல் பயணத்திற்குப் பொருத்தமற்ற பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் தொடர்ந்தும் இவ்வாறான மனித கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அவ்வாறான கப்பல்கள் சட்டவிரோதக் குடியேற்றத்தை மேற்கொள்ள முற்பட்டால் அவர்களின் உயிருக்குப் பெரும் ஆபத்து ஏற்படும் எனவும் கடற்படை பொதுமக்களை எச்சரித்துள்ளது.