நடவடிக்கை செய்தி

காலி பிரதேசத்தில் வெள்ள அபாயத்தை குறைக்கும் வகையில், பாலங்களை அண்மித்த பகுதியில் கடற்படையினரால் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கிங் ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக காலி பிரதேசத்தில் அகலிய மற்றும் தொடம்கொட பாலங்களை அண்மித்த பகுதியில் சிக்கிய மரக்குற்றிகள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்றை 2022 ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி கடற்படையினர் மேற்கொண்டனர்.

04 Aug 2022

சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த சுமார் 34 கிலோ 38 கிராம் (ஈரமான எடை) கொண்ட கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 04) அதிகாலை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றியுள்ளனர்.

04 Aug 2022

சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு கேரள கஞ்சா பொதி மன்னாரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 03) காலை மன்னார் மனல்பாறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 49 கிலோ 380 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

04 Aug 2022

திருகோணமலை கடலில் தத்தளித்த மூன்று மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு

திருகோணமலை வெளி துறைமுகப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளான சிறிய மீன்பிடிப் படகொன்றில் இருந்த மூன்று (03) மீனவர்களை 2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

04 Aug 2022