வத்தளை புபுதுகம சதுப்பு நிலப்பகுதியில் ஏற்பட்ட அவசர தீயை அணைக்க கடற்படையின் உதவி

வத்தளை புபுதுகம சதுப்பு நிலத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க உதவுமாறு கம்பஹ மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவினர் இன்று (2022 ஆகஸ்ட் 26) செய்த அறிவித்தலுக்கு இணங்க, கடற்படையினர் உடனடியாக மூன்று (03) தீயணைப்பு குழுக்களை அனுப்பி வைத்தனர்.

இதன்படி, மேற்கு கடற்படை கட்டளை மூலம் 02 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 03 நீர் பௌசர்கள் இலங்கை கடற்படை கப்பல்களான கெமுனு, ரங்கல மற்றும் களனி ஆகியவற்றின் 03 தீயணைப்பு குழுக்களுடன் அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த தீயை அணைக்க நியமிக்கப்பட்டுள்ள ஏனைய தரப்பினருடன் இணைந்து, இந்த சதுப்பு நிலத்தை சூழவுள்ள காட்டுப்பகுதியில் பரவி வரும் தீயை அணைக்க கடற்படை குழுவினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.