இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 ஆகஸ்ட் 27 ஆம் திகதி இரவு தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) இந்திய மீனவர்களுடன் ஒரு இந்திய படகு கைது செய்யப்பட்டன.

வெளிநாட்டு மீனவர்கள் நாட்டின் கடற்பரப்பை அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் உள்ளுர் மீனவ சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும், நாட்டின் கடல்சார் சூழலின் பல்லுயிர் சேதத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படை நாட்டின் கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணியை அதிகரித்து, தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர், 2022 ஆகஸ்ட் 27 அன்று இரவு, வடக்கு கடற்படை கட்டளையின் நான்காவது விரைவுத் தாக்குதல் படைக்கு சொந்தமான விரைவுத் தாக்குதல் படகொன்று மூலம் இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்றை மேற்கொன்டுள்ளனர். அப்போது தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீன்பிடி படகு ஒன்றுடன் ஆறு (06) இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்திய மீன்பிடி படகு மற்றும் படகில் இருந்த ஆறு (06) இந்திய மீனவர்கள் தற்போது தலைமன்னாரில் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், 2022 ஆகஸ்ட் 22 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற நடவடிக்கையில் 10 இந்திய மீனவர்கள் மற்றும் இந்திய மீன்பிடிப் படகொன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.

மேலும், நாட்டின் கரையோரப் பாதுகாப்பிற்காகவும், உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.