சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளன

‍‍‍தீவை பாதித்துள்ள கடும் மழையினால் வெள்ள அபாயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் இன்று (ஆகஸ்ட் 31, 2022) மாலை 35 கடற்படை நிவாரண குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரைக்கு அமைவாக மேற்கு கடற்படை கட்டளை 26 நிவாரண குழுக்களை களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அனுப்புவதற்கு தயார் நிலையில் வைத்துள்ளது. அதேபோன்று, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் நிலைநிறுத்துவதற்காக 09 குழுக்கள் தென் கடற்படை கட்டளையினால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த நிவாரணக் குழுக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒருங்கிணைப்பில் தேவைக்கேற்ப நிலைநிறுத்தப்பட்டு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.