இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 செப்டம்பர் 06 ஆம் திகதி மாலை முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகுகளை கண்கானித்து குறித்த படகுகளை இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் விரட்டுவதற்காக சிறப்பு நடவடிக்கயொன்றை மேற்கொண்டனர். இதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் நான்காவது விரைவுத் தாக்குதல் படையணிக்கு சொந்தமான விரைவுத் தாக்குதல் படகொன்றில் கடற்படையினர் இன்று (2022 செப்டம்பர் 06) பிற்பகல் முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகொன்றுடன் (12) இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள்கைது செய்துள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் படகில் இருந்த (12) இந்திய மீனவர்கள் தற்போது திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும், இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீனவர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் உள்நாட்டு மீனவ சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் கடல்வாழ் உயிரினப் பன்முகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தொடர்ந்து இவ்வாரான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.