நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 2448 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் நீர்கொழும்பு தூவ பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் 2022 நவம்பர் 08 ஆம் திகதி காலை நீர்கொழும்பு, தூவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 2448 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகளுடன் இரண்டு (02) லொறிகள், ஒரு டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

09 Nov 2022

கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து வடக்கு கடலில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது 137 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து யாழ்ப்பாணம் நெடுந்தீவின் தென்கிழக்கு கடல் பகுதியில் இன்று (2022 நவம்பர் 09) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 458 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றை இலங்கை கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டது.

09 Nov 2022