54 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் 2023 ஜனவரி 22 ஆம் திகதி கல்பிட்டி, நொரோச்சோலை பகுதியில் மற்றும் அனுராதபுரம் புதிய நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 54 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இரு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனத்துடன் இணைக்கப்பட்ட கடற்படைக் குழுவினால் 2023 ஜனவரி 22 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, நொரோச்சோலை, புளச்சேனை சந்தியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்று சோதனையிடப்பட்டது. அங்கு, லொறியில் கொண்டு செல்லப்பட்ட இருபத்தைந்து (25) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 45 கிலோ 280 கிராம் கேரள கஞ்சாவுடன் லொறி வண்டி மற்றும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், வடக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வட மத்திய கலால் திணைக்கள அலுவலகத்துடன் இணைந்து இலங்கை கடற்படைக் கப்பல் உத்தர நிருவனத்தின் கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 2023 ஜனவரி 22 ஆம் திகதி அனுராதபுரம் புதிய நகரில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு, நான்கு பார்சல்களில் (04) பொதி செய்யப்பட்ட 08 கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் வீதி மதிப்பு ரூ. 18 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.

மேலும், நொரோச்சோலை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் லுணுகம்வெஹர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர், கேரள கஞ்சா மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், அனுராதபுரம் புதிய நகரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபரும் கேரள கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமத்திய கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.