20 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம், அனலதீவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து இன்று (2023 ஜனவரி 24) காலை யாழ்ப்பாணம் அனலதீவு கரையோரப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டுள்ளது.

கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் எலார நிறுவனத்தின் கடற்படையினர் யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸாருடன் இணைந்து இன்று (2023 ஜனவரி 24,) காலை யாழ்ப்பாணம் அனலதீவு கரையோரப் பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது கடற்கரைக்கு மிதந்தது வந்த 25 பார்சல்களாக அடைக்கப்பட்ட இரண்டு சாக்கு மூட்டைகள் கேரள கஞ்சா 60 கிலோகிராம் 652 கிராம் (ஈரமான எடை) கைது செய்துள்ளனர்.

கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு 20 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.