நடவடிக்கை செய்தி

20 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம், அனலதீவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து இன்று (2023 ஜனவரி 24) காலை யாழ்ப்பாணம் அனலதீவு கரையோரப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டுள்ளது.

24 Jan 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1105 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய களப்பு பகுதியில் கைப்பற்றப்பட்டது

நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய களப்பு பகுதியில் இன்று (2023 ஜனவரி 24) அதிகாலை இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1105 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

24 Jan 2023