நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 08 பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது

2023 மார்ச் மாதம் 13 ஆம் திகதி அதிகாலை மன்னார், சிலாவத்துறை மற்றும் வங்காலே கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது நீர்மூழ்கிக் கருவிகள், 814 கடல் அட்டைகள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளுடன் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 08 பேர் கைது செய்யப்பட்டனர்.

14 Mar 2023

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1128 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் 2023 மார்ச் மாதம் 13 ஆம் திகதி இரவு புத்தளம், முக்குதொடுவாவ கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 1128 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், பீடி இலைகள் மற்றும் லொறி வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

14 Mar 2023