நடவடிக்கை செய்தி

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையில் இருந்து 28 நீர் ஜெல் குச்சிகளை கடற்படையினர் கைப்பற்றினர்

2023 மார்ச் மாதம் 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரையில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் 28 குச்சிகள் கைப்பற்றப்பட்டன.

18 Mar 2023

2000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் ஜா-எல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து 2023 மார்ச் மாதம் 17 ஆம் திகதி மாலை ஜாஎல பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையிலன் போது சட்டவிரோதமாக விற்பனை செய்ய 2000 வெளிநாட்டு சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

18 Mar 2023

முல்லைத்தீவு கடலில் மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் இணைந்து 2023 மார்ச் மாதம் 16 ஆம் திகதி முல்லைத்தீவு, அலம்பில் கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவருடன் (02) இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டது.

18 Mar 2023