மின் விளக்குகளை பயன்படுத்தி வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் கடற்பகுதியில் இன்று (21 மார்ச் 2023) அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து (05) நபர்களுடன் மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இன்று (மார்ச் 21, 2023) அதிகாலை, வடக்கு கடற்படை கட்டளையின் சுண்டிக்குளம் கடற்படை பிரிவுக்கு சொந்தமான மரையின் படைப் பிரிவின் வீரர்கள் சிறிய கப்பல்களினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து (05) நபர்களுடன் மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட முல்லைத்தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த ஐந்து (05) பேர், மீன்பிடி சாதனங்கள் மற்றும் மூன்று (03) டிங்கிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.