சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கொண்டு சென்ற நபர் ஒருவர் மன்னாரில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், மன்னார், பல்லேமுனை களப்பு பகுதியில் 2023 மார்ச் மாதம் 27 ஆம் திகதி மாலையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் உலர்ந்த கடல் அட்டைகளை கொண்டு சென்ற நபர் ஒருவருடன் (01) நீர்மூழ்கிக் கருவிகள், சுமார் 230 கிலோகிராம் உலர் கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று (01) கைப்பற்றப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 மார்ச் 27 ஆம் திகதி மாலை வட மத்திய கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா நிருவனத்தின் கடற்படையினர் மன்னார், பல்லேமுனை கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் உலர் கடல் அட்டைகள் கொண்டு சென்ற ஒருவருடன் (1) நீர்மூழ்கிக் கருவிகள், சுமார் 230 கிலோகிராம் உலர் கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று கைது செய்யப்பட்டது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 52 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர், நீர்மூழ்கிக் கருவிகள், டிங்கி படகு மற்றும் கடல் அட்டைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.