அனுமதிப்பத்திரமின்றி 12,700 கடல் அட்டைகளை கொண்டு சென்ற 03 பேர் மன்னார் கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 மார்ச் 30 ஆம் திகதி மன்னார், மனல்பாறையை அண்டிய கடற்பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் இன்றி கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் 12700 கடல் அட்டைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 மார்ச் 30 ஆம் திகதி, வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான, இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னா நிருவனத்தின் கடற்படையினர் மன்னார், மணல்பாறையை அண்டிய கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற டிங்கி படகொன்று சோதனை செய்தனர். அப்போது குறித்த டிங்கி படகில் அனுமதிப்பத்திரமின்றி கடத்திச் செல்லப்பட்ட 12700 கடல் அட்டைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் (03) மற்றும் சுழியோடி உபகரணங்களும் கைது செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 21 முதல் 32 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், சுழியோடி உபகரணங்கள், டிங்கி படகு மற்றும் 12,700 கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.