நடவடிக்கை செய்தி

பேருவளை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை திணைக்களம் இணைந்து இன்று காலை (2023 மே 14) மேற்கொண்ட விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, பேருவளை கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 15 கிலோமீற்றர்) தொலைவில், இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணத்தினால் ஏற்பட்ட கடல் நீர் கசிவு காரணமாக மூழ்கும் அபாயத்தில் இருந்த மீன்பிடிப்படகொன்றில் இருந்த ஆறு (06) மீனவர்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான CG 208 படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

14 May 2023