உலர் கடல் அட்டைகள் உள்ளிட்ட பொருட்களுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து 2023 மே 19 ஆம் திகதி கல்பிட்டி ரொட்டபாடு கடற்கரைப் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 603 கிலோகிராம் உலர் கடல் அட்டைகள் மற்றும் 11520 ஷாம்பு பாக்கெட்டுகளுடன் (தலா 6 மில்லி) 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் கல்பிட்டி பொலிஸார் கல்பிட்டி ரொட்டபாடு கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிட்டனர். அங்கு 10 பைகளில் மறைத்து வைக்கப்பட்ட சட்டவிரோதமாக கடல் வழி மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 603 கிலோகிராம் உலர் கடல் அட்டைகள் மற்றும் 11520 ஷாம்பு பொதிகளுடன் (6 மில்லி) இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட உலர் கடல் அட்டைகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் மற்றும் சந்தேகநபர்கள் இருவர் (02) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.