வர்த்தக வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர் குச்சவேளி பொலிஸாருடன் இணைந்து திருகோணமலை குச்சவேளி கசீம்நகர் பகுதியில் இன்று (2023 மே 22) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனையிட்டதுடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் ஐம்பத்து நான்கு குச்சிகள் (54) மற்றும் ஐம்பது (50) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் ஒரு பெண் (01) கைது செய்யப்பட்டார்.

வெடிபொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் குச்சவேளி பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளால் திருகோணமலை குச்சவேளி கசீம்நகர் பகுதியில் இன்று (22 மே 2023) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டைச் சோதனையிட்டதுடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பத்து நான்கு (54) வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வணிக வெடிபொருட்கள் மற்றும் ஐம்பது (50) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இந்த வர்த்தக வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01) குச்சவேளி கசீம்நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01), ஐம்பத்து நான்கு (54) வாட்டர் ஜெல் குச்சிகள் (Water Gel) மற்றும் ஐம்பது மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் (50) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.