காலி, வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு

கிங்தோட்டை பகுதியில் கடலுக்கு செல்லும் கிங் கங்கை ஊடாக வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர் 2023 மே மாதம் 19 மற்றும் 22 ஆம் திகதிகளில் ஈடுபட்டனர்.

கிங் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அதிக அளவு மழை பெய்தல், குப்பைகளை முறையற்ற முறையில் கொட்டுதல் மற்றும் மரங்கள் மற்றும் மூங்கில் புதர்களை வெட்டுதல் போன்ற பல காரணங்களின் விளைவாக உயரும் ஆற்றின் நீர் மட்டம் இத்தகைய குப்பைகளை சிக்க வைக்கிறது. மேலும், இந்த குப்பைகள் வக்வெல்ல குறுகிய பாலத்தில் சிக்கி, படிப்படியாக நீரின் ஓட்டத்தைத் தடுக்கிறது.

இது தொடர்பாக நிலையான கவனம் செலுத்தும் கடற்படை தெற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தின் சுழியோடி பிரிவின் மற்றும் விரைவுப் பதிலளிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் கடற்படையினர் குழுகளை குறித்த இடத்திற்கு அனுப்பி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.