வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் கடைக்காடு, நகர்கோவில் மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பில் 2023 ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இரவில் சுழியோடி நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத ஒளி நீரோட்டங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 16 மீனவர்கள், நான்கு (04) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையத்திற்கு உட்பட்ட வெத்தலக்கேணி, மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்படை பிரிவுகளின் கடற்படையினர் கடைக்காடு, நகர்கோவில் மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இரவில் சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றும் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பதினாறு (16) நபர்கள், நான்கு (04) படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களுடன் கைப்பற்றப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 16 முதல் 58 வயதுக்குட்பட்ட சீனக்குடா, திருகோணமலை, நகர்கோவில், வவுனியா, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் புதுமாத்தளன் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 16 நபர்கள், 04 டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்