இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய பல நாள் மீன்பிடிக் படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டும் நோக்கில், இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து 2023 ஜூலை 24 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய பல நாள் மீன்பிடிப் படகுகளுடன் 09 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணிகளை அதிகரித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடி படகுகளைக் கண்காணித்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2023 ஜூலை 24 ஆம் திகதி இரவு, வடக்கு கடற்படை கட்டளையின் நான்காவது விரைவுத் தாக்குதல் படைக்கு சொந்தமான விரைவுத் தாக்குதல் படகுகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் படகுகள் மூலம் இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்றை மேற்கொன்டனர். அப்போது யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு இந்திய மீன்பிடி படகுகளுடன் 09 இந்திய மீனவர்கள் இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் (02) மற்றும் படகில் இருந்த இந்திய மீனவர்கள் 09 பேரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.