24 கிலோ கிராமுக்கும் அதிகமான மான் இறைச்சியுடன் 03 பேர் கடற்படையினரால் கைது

பானம சாஸ்திரவேளி பகுதியில் 2023 ஜூலை மாதம் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 24 கிலோவிற்கும் அதிகமான மான் இறைச்சியுடன் மூவர் (03) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தின் கடற்படையினர் 2023 ஜூலை 25 ஆம் திகதி பானம சாஸ்திரவேளி பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மூன்று (03) நபர்கள் அப்பகுதியில் தங்கியிருந்ததை அவதானித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து 24 கிலோ 300 கிராம் மான் இறைச்சி கைது செய்யப்பட்டதுடன் குறித்த மூவரையும் (03) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்ட பானம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர்களும் மான் இறைச்சியும் பானம வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.