கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் புல்முடை, கோகிளாய் கடற்பகுதியில் 2023 ஜூலை 25 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வணிக வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பத்தொன்பது (19) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைபற்றினர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்வதால், இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் மீன் வளம் விரைவில் அழிந்து வருவதை தடுக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகளை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2023 ஜூலை 25 ஆம் திகதி கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் ரன்வேலி நிருவனத்தின் கடற்படையினர் புல்முடை கோகிளாய் கடற்பகுதியில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வர்த்தக வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகளின் மூலம் இவர்கள் பயன்படுத்திய 04 டிங்கி படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் புல்மூடை, நிலாவெளி மற்றும் குச்சவெளி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் 18 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், அவர்களது பொருட்களுடன் முல்லைத்தீவு கடற்றொழில் பரிசோதகரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.