கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினரால் கைது

புல்முடே கொக்கிளாய் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் 2023 ஜூலை 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) பேர், ஒரு டிங்கி படகு (01), சுமார் நூற்று ஐந்து (105) கிலோகிராம் எடையுள்ள மீன் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்வதால், இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் மீன் வளம் விரைவில் அழிந்து வருவதை தடுக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகளை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2023 ஜூலை 27, ஆம் திகதி கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் ரன்வேலி நிருவனத்தின் கடற்படையினர் புல்முடே கொக்கிளாய் கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொன்டனர். அங்கு சட்டவிரோத வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) பேர், ஒரு டிங்கி படகு (01), சுமார் நூற்று ஐந்து (105) கிலோகிராம் எடையுள்ள மீன் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட குச்சவெளி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் (03) மூவரும் டிங்கி படகு (01), மீன் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.