கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 செப்டெம்பர் 03 ஆம் திகதி இரவு திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரண்டு (12) நபர்களுடன் இரண்டு டிங்கி படகுகள் (02) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல்துறையின் கடற்படையினர் 2023 செப்டெம்பர் 03 ஆம் திகதி இரவு மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் மின் விளக்குகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேருடன் இரண்டு (02) படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 20 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட குறித்த நபர்கள் திருகோணமலை, சீன துறைமுகம் மற்றும் நிலாவெளி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 பேர் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோட்பே கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரு டிங்கி படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கும் வரை கடற்படை காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.