கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 செப்டம்பர் 13,) காலை திருகோணமலை சல்லிப் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடித்த 6 பேருடன் (06) டிங்கி படகு ஒன்றை கைதுசெய்துள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இன்று (2023 செப்டம்பர் 13) அதிகாலையில், கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் திருகோணமலை சல்லி கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள், ஒரு டிங்கி படகு (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட கிண்ணியா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் (06) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் உதவிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட டிங்கி படகு (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.